செங்கல்பட்டு 25 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அம்மாபேட்டை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதற்கட்டமாக 25 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் விடுதியின் அறைகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக சென்னை ஐஐடியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chengalpattu 25 medical students affected covid positive


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->