சரக்குவேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் பிரானூர் பாடர் பகுதியை சேர்ந்தவர் சரக்கு வேன் டிரைவர் விக்னேஷ்.

இவர் நேற்று மேலூர் கதிரவன் காலனியை சேர்ந்த விறகு வெட்டும் 6 தொழிலாளர்களுடன் மதுரை மாவட்டம் காண்டை கிராமத்திற்கு சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எம். சப்புலாபுரம் பகுதியில் உள்ள பாலத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுனர் மற்றும் சரக்கு வேனில் இருந்த ஆறு ஆறு தொழிலாளர்களும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cargo van overturns in ditch in thenkasi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->