சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 5 பேர் கைது - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கோலப்பன்சாவடி மகாலட்சுமி நகரில் ரோந்து பணி ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமளிக்கும் விதமாக நின்றிருந்த ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த தீபக், வம்சி, தமிழரசன், வசந்த் குமார் மற்றும் திருவூரை சேர்ந்த சுதன் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis smugglers arrested in tiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->