நாகையில் கஞ்சா செடிகளை வளர்த்த சகோதரர்கள்.. தம்பி சிக்கிய நிலையில் அண்ணன் ஓட்டம்.!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனி படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சுல்லாங்கால் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது பிரகாஷ் என்பவரின் வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஈரோட்டில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வரும் ராகுலின் சகோதரர் பிரகாஷ் ஈரோட்டில் இருந்து கஞ்சா விதையை வாங்கி வந்து வீட்டில் வளர்த்து வந்தது தெரிய வந்தது. கஞ்சா செடிகளை வளர்த்த ராகுலை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய பிரகாஷை தேடி வருகின்றனர். வீட்டில் உள்ளவர்கள் அழகுக்காக வளர்க்கப்படும் செடி என நினைத்து வீட்டின் முன் வைத்த போது பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் இருவரும் சிக்கி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

brothers caught for cultivated cannabis in nagai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->