எருக்கம் பூ பறிக்கச் சென்ற சிறுவன் - பிணமாக வீடு திரும்பிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


எருக்கம் பூ பறிக்கச் சென்ற சிறுவன் -  பிணமாக வீடு திரும்பிய சம்பவம்.!

சென்னையில் உள்ள தாம்பரம் அடுத்த சானிடோரியத்தில், சத்யா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் மகன் விஷ்வா. பதினோரு வயதுடைய இவர் ராமகிருஷ்ணபுரம் அரசு உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். 

இவர் விநாயகர் சதூர்த்தி என்பதால் நேற்று மாலை சானிடோரியம் மேம்பாலம் அருகே உள்ள ரயில்வே மைதானத்திற்கு எருக்கம் பூ பறிப்பதற்காகச் சக நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அங்கு மழை நீர் தேங்கி நின்ற பள்ளத்தில் மீன்கள் இருக்கிறதா? என்று எட்டி பார்த்துள்ளார். 

அப்போது விஷ்வா எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் கூச்சலிட்டபடி சென்று அப்ப்குதியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். 

உடனே அவர்கள் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் படி போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் விழுந்த விஷ்வாவை பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்டனர். 

இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died for drowned water in thambaram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->