சார்ஜில் இருந்த செல்போனை எடுக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


செல்போனை சார்ஜில் இருந்து கழற்றும் போது மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் செந்தில். இவர் குடும்பத்துடன் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில் மகன் கோபிநாத் வீட்டில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த செல்போனை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் ஈரக்கையொடு சார்ஜில் இருந்த செல்போனை எடுக்க முயற்சித்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy death in Vellore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->