பிரபல வங்கிக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த நபர் - புகாரில் வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


பிரபல வங்கிக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த நபர் - புகாரில் வெளியான அதிர்ச்சி தகவல்.!!

சென்னையை அடுத்து தி.நகரில் வி.என் சாலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மேனேஜராக நீதிராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அந்த புகாரில், "நேற்று நள்ளிரவு எனது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், எதிர் திசையில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களது வங்கியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து நான் அவரிடம் கேட்ட போது, அந்த நபர் பொழுது போகவில்லை. அதனால் விளையாட்டிற்காக போன் செய்ததாக கூறி விட்டு சிரித்து கொண்டே இணைப்பை துண்டித்து விட்டார்.

ஆகவே, இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகாரின் படி போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வாங்கிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அதில், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கவில்லை. அதன் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb threat to bank in chennai police enquiry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->