#பெரம்பலூர் || விநாயகர் சிலைக்காக காவல் நிலையத்தை சுத்து போட்ட பாஜகவினரால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தமிழக அரசு பல்வேறு நிபந்தங்களை விதித்துள்ளது. மேலும் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதியோடு விநாயகர் சிலை வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வருவாய் துறை காவல்துறையினர் உதவியுடன் அகத்தியர் உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் பொதுமக்களை ஒன்று கூட்டி வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு வி.களத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. 

மேலும் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்களும் பாஜகவினரும் காவல் நிலைய வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP laid siege for police built ganesh idol in Namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->