தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல்.. பாஜக தலைவர் அதிரடி கைது.!!
BJP agoram arrested for threaten dhaarmapuram adheenam
மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் தருமபுரம் ஆதீன மடாதிபதியை பணம் கேட்டு மிரட்டியதாக தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக, பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். மயிலாடுதுறையில் செல்வாக்கு மிக்க அகோரம் பாமகவில் இருந்து பாஜகவில் இணைந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது அகோரம் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP agoram arrested for threaten dhaarmapuram adheenam