விக்கிரமசிங்கபுரத்தில் கரடிகள் ஊடுருவல்...வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்! - வனத்துறையினர் அதிரடி...!
Bears intrude vikramasinghapuram people trapped inside their homes Forest Department takes action
விக்கிரமசிங்கபுரத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள், இயற்கையின் செழிப்பை தன்னகத்தே தாங்கியவையாகும். இந்தப் பகுதியில் கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றன.
ஆனால் அவை அவ்வப்போது தங்கள் இயல்பான வாழ்விடங்களை விட்டு வெளியேறி, மலை அடிவார கிராமங்களுக்குள் புகுந்து மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறுவது தொடர்ச்சியான பிரச்சினையாகிவிட்டது.

குறிப்பாக விக்கிரமசிங்கபுரம், திருப்பதியாபுரம், செட்டிமேடு, கல்லிடைக்குறிச்சி போன்ற சுற்றுப்புற பகுதிகளில் கரடிகள் சாலைகளில் சுதந்திரமாக உலா வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நேற்று முன்தினம் இரவு, விக்கிரமசிங்கபுரம் மங்கம்மா சாலையில் இரண்டு கரடிகள் இணைந்து சுற்றித் திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த காட்சியை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால், அது வேகமாக வைரலாகி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் யாரேனும் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
கரடிகளின் தொடர்ந்த நடமாட்டம் காரணமாக, இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தயங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், கரடிகளை பாதுகாப்பாக கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Bears intrude vikramasinghapuram people trapped inside their homes Forest Department takes action