சர்வதேச பலூன் திருவிழா - அதிகாலையிலேயே பொள்ளாச்சியில் குவிந்த பொதுமக்கள்.!
balloon festival in pollachi
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் வெப்பக்காற்று பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பொள்ளாச்சியில் நேற்று 9வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழாவின் துவக்க விழா நடைபெற்றது.
இந்த பலூன் திருவிழாவிற்கு பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம், நெதர்லாண்ட்ஸ், உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வரவழைக்கப்பட்டு இன்று வானில் பறக்க விடப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம், நேற்று மாலை பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் தமிழ்நாடு பலூன் உள்ளிட்ட நான்கு பலூன்கள் நூறு அடி உயரம் வரை பறக்கவிடப்பட்டது.

இந்த பலூன் திருவிழாவைக் காண்பதற்காக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வருகை தந்திருந்தனர். இந்த வெப்பகாற்று பலூனில் 100அடி வரை பறக்க ஒரு நபருக்கு 1,600 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப காற்று பலூன் இன்று முதல் 16ம் தேதி வரை வானில் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பலூன் இன்று அதிகாலை பொள்ளாச்சி ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து துவங்கி பொள்ளாச்சியை சுற்றி பறக்கும் எனவும், காலை வேளையில் வானில் பறக்கும் பலூனில் பறக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
balloon festival in pollachi