தாயின் சிறு அலட்சியம், தவழ்ந்து வந்த குழந்தை., மரண வலியில் உயிரிழந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தாயின் அலட்சியத்தால் ஒரு வயதான குழந்தை மீது, கொதிக்கின்ற பால் கொட்டி உயிர் இழந்து இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரணை கிராமத்தை சேர்ந்தவர் ரவி, இவரின் மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு ஒரு வயதே ஆன ஆண் குழந்தை (பெயர்: காசியப்பன்) ஒன்று உள்ளது. 

இந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சங்கீதா தனது வீட்டில் உள்ள ஸ்டவ்வில் பால் காய்த்து, அடுப்பின் பக்கத்திலேயே இறக்கி வைத்துள்ளார். அப்போது சங்கீதாவை யாரோ அழைக்க, யார் என்று பார்ப்பதற்காக வீட்டு வாசலுக்கு சங்கீதா சென்றுள்ளார்.

அந்நேரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை காசியப்பன், திடீரென்று எழுந்து சூடாக காய்ச்சி வைக்கப்பட்டிருந்த பால் பாத்திரத்தின் சென்றுள்ளான். விவரம் அறியாத அந்த குழந்தை பால் பாத்திரத்தை பிடித்து இழுக்கவே., கொதிக்க கொதிக்க இருந்த அந்த பால் குழந்தை மீது கொட்டியது.

இதனால் படுகாயம் அடைந்த குழந்தை அலறி துடித்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சங்கீதா, உடனடியாக குழந்தையை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் குழந்தை காசியப்பன் பரிதாபமாக உயிரிழந்து போனான். குழந்தையின் இந்த மரணம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயின் அலட்சியத்தால் ஒரு வயதான குழந்தை உயிரிழந்து இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby dead in hot milk accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->