காஞ்சிபுரத்தில்.. இறந்த நிலையில் பிறந்த குழந்தை - அடுத்த நொடியே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சத்யா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

ஆனால், இந்தக் குழந்தை இறந்த நிலையில், பிறந்துள்ளது. இதையடுத்து தாய் சத்யாவுக்கு திடீரென அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர், அவர்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான்  தாயும் சேயும் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby and mother died in kanchipuram


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->