களத்தில் காயம்! 17 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற அவனியாபுரத்து ஜல்லிக்கட்டு வீரன்! - Seithipunal
Seithipunal


அவனியாபுரத்து ஜல்லிக்கட்டு களத்தில் காயம் அடைந்தும், 17 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றுள்ளார் அவனியாபுரம் கார்த்திக்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 7 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற்றது.

மொத்தம் 854 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

10 சுற்றுகளுடன் நிறைவு பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அவனியாபுரம் கார்த்திக் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.

களத்தில் காயம் அடைந்த போதிலும் களத்தில் வீரத்துடன் ஆடி முதலிடம் பிடித்த கார்த்திக்கு தமிழக முதல்வர் சார்பில் வழங்கப்படும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

கார்த்திக் ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு 23 காளைகளை அடக்கி முதலிடமும், கடந்த ஆண்டு 17 காளைகளை அடக்கி இரண்டாமிடமும் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த காளையாக ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.  மேலும், 13 காளைகளை அடக்கிய முரளிதரன், 9 காளைகளை அடக்கிய முரளிதரன், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avaniyapuram karthik jallikattu 2024


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->