அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மதுரை அவனியாபுரம், பாலக்கோடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது. 

புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் உள்ள சிறந்த காளைகள் கலந்து கொள்ளும். 

இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 

பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

முதல் சுற்று தொடங்கியுள்ள நிலையில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. முதல் சுற்றில் 50 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்காக அந்த பகுதியில் ஏராளமான மக்கள் சூழ்ந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Avaniyapuram Jallikattu minister flagged


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->