தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராமசபை கூட்டம் - தமிழக அரசு உத்தரவு.!
August 15 gramasaba meeting in tamilnadu
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் ஆண்டுக்கு 4 கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்கள் மதச்சார்பற்ற வளாகத்தில் நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
English Summary
August 15 gramasaba meeting in tamilnadu