செங்கல்பட்டில் பயங்கரம்.. நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் மீது தாம்பரம், ஓட்டேரி உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை கொலை முயற்சி பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு வழக்கிற்காக செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார்.

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் நீதிமன்ற வாசலில் லோகேஷை அறிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சியில் அவர்களிடம் பிடிபடாமல் தப்பிய லோகேஷ் அங்கிருந்து ஓடியுள்ளார். அப்பொழுது நீதிமன்ற வாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் ஓடிய லோகேஷை அந்த கும்பல் விடாமல் துரத்தியுள்ளது.

அப்பொழுது அவரை பிடிக்க முடியாததால் கையில் வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை லோகேஷ் மீது வீசி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து கடையின் முன்பு அறிவாளால் லோகேஷை சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

இதன் காரணமாக செங்கல்பட்டு நகர் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரதீப் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோகேஷை வெட்டுவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் சிசிடிவி காட்சி உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attempted murder by throwing bomb near chengalpattu court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->