அரியலூர் அருகே மனைவியை திட்டி, தாக்கிய கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் மாணவியை திட்டி, தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் சலுப்பை காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவரது மனைவி சுபா (29). இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து சுரேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி சுபாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சுரேஷ் மற்றும் அவரது தம்பி சேர்ந்து சுபாவை திட்டியுள்ளனர். மேலும் அவரை தாக்கியதால் சிவா பலத்த காயமடைந்தார். இதையடுத்து காயம் அடைந்த சுபாவை சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் சுபா புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ் கைது செய்தனர். மேலும் அவரது தம்பியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arrested husband who insulted and beat his wife in Ariyalur


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->