"தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர்!" – மதுரையில் நயினார் நாகேந்திரன் ஆவேச முழக்கம்.
2026 Polls A Battle of Dharma vs Adharma says BJP State President Nainar Nagendran
மதுரை மண்டேலா நகரில் இன்று (மார்ச் 1) நடைபெற்று வரும் பிரம்மாண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். உலக நாடுகளே வியந்து பார்க்கும் 'வாராது வந்த மாமணி' எனப் பிரதமர் மோடியைப் புகழ்ந்து தனது உரையைத் தொடங்கிய அவர், திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.
திமுக மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்:
மஞ்சள் பை டூ கஞ்சா: "புத்தகங்களைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய மாணவர்களின் கைகளில் இன்று கஞ்சா புழங்குகிறது. தமிழக இளைஞர்களின் இந்தச் சீரழிவிற்கு திமுக-வின் மோசமான நிர்வாகமே முழு முதற்காரணம்" என அவர் குற்றம் சாட்டினார்.
வாரிசு அரசியல்: ஒட்டுமொத்த அரசாங்கமும் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்கும் ஒற்றை இலக்கை நோக்கியே இயங்கிக் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார்.
பெண்கள் பாதுகாப்பு: தமிழகத்தில் சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை யாருக்கும் எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்ற கவலையை அவர் முன்வைத்தார்.
தேர்தல் அறைகூவல்:
2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு சாதாரணத் தேர்தலாகப் பார்க்காமல், ஒரு தார்மீகப் போராக இருக்கும்.: வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் போராட்டமல்ல; அது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான இறுதிப் போர்!" என்று தெரிவித்தார்.
English Summary
2026 Polls A Battle of Dharma vs Adharma says BJP State President Nainar Nagendran