சிறுமிக்கு பாலியல் தொல்லை - மனைவியுடன் சிக்கிய ராணுவ அதிகாரி.! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொல்லை - மனைவியுடன் சிக்கிய ராணுவ அதிகாரி.!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுமி, இமாச்சல பிரதேசம் மாநிலம் பாலம்பூரில் உள்ள ராணுவ மேஜர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். 

அப்போது அந்த சிறுமிக்கு ராணுவ மேஜர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இந்த கொடுமைகளை தாங்க முடியாமல், சிறுமி அங்கிருந்து தப்பித்துள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் ராணுவ மேஜர் மீது போக்சோ உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்த ராணுவ மேஜரின் மனைவியையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

army man arrested with wife for harassment case in himachal pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->