எறும்பு மொய்த்த நிலையில் பச்சிளம் பிஞ்சுகளின் உடல்கள்.. அரியலூரில் அதிர்ச்சி.!
Ariyalur Sendurai 2 Born Child Dead Body Rescued by Villagers Police Investigation 23 April 2021
பிறந்து சிலமணிநேரம் ஆகிய குழந்தையின் உடலை புதைத்த நிலையில், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை அதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமிண்ட் ஆலைக்கு சொந்தமான சுரங்கம் மற்றும் அதன் அருகே ஓடை உள்ளது. இந்த ஓடையில் உள்ள கரையில், பிறந்து சிலமணிநேரம் ஆகிய இரட்டை குழந்தைகளின் உடல்கள் இருந்துள்ளது.
ஆண், பெண் என பிறந்த இரட்டை குழந்தைகளை யாரோ புதைத்து சென்ற நிலையில், சிசுவின் உடலில் எறும்பு மொய்த்து இருந்துள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தைகளின் உடலை விட்டு சென்றது யார்? என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ariyalur Sendurai 2 Born Child Dead Body Rescued by Villagers Police Investigation 23 April 2021