அரியலூர்: கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்.. பெற்றோர்கள் கவலை.!
Ariyalur Jayankondam College girl Missing Police Investigation
ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவி மாயமாகியுள்ளது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியை சார்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் வாசுகி (வயது 20). இவர் பெரம்பலூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் வருடம் பயின்று வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற வாசுகி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.
மகளை காணாது பரிதவித்த பெற்றோர், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வாசுகி கடத்தப்பட்டாரா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ariyalur Jayankondam College girl Missing Police Investigation