செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய சிவகார்த்திகேயன் மகள்.! - Seithipunal
Seithipunal


செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடியுள்ளார். 

சென்னையில் இருக்கும் நேரு உள் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூலை 28-ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா கோலாகலத்துடன் துவங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர் எம் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிக்காக 186 நாடுகளிலிருந்து செஸ் வீரர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். துவக்க விழாவை போல ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியும் வரும் 9-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

இந்த நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இத்தகைய நிலையில், இன்று மாலையில் இருந்தே செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா துவங்கிவிட்டது. இந்த நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் மகள் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aradhana sings In Chess Olympiad


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->