மின் வாரியத்தில் பணியிட மாற்றம்.! ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..! - Seithipunal
Seithipunal


வருகின்ற ஜூலை 15-ம் தேதிக்குள் மின் வாரியத்தில் பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணியமைப்புப் பிரிவுதலைமைப் பொறியாளர் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஜனவரி மாதத்தில் பணியிட மாற்றம் கோரி சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் வரை நடவடிக்கை எடுக்கப்படாத அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

அதனால், புதிதாக பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிப்போரும், இடமாற்றம் கிடைக்கப்பெறாதோரும் ஜூலை 1 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும், பொறுப்பு அதிகாரியிடமும் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுவதால், கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது. எனவே, விண்ணப்பம் செய்தவர்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை ஜூலை 15-ம் தேதியில் இருந்து ஒரு வாரத்துக்குள் பொறுப்பு அதிகாரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பத்தில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apply for transfer in the Electricity Board by July 15


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->