கொட்டித் தீர்க்கும் மழை - அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "தமிழகத்தில் இன்று மாலை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது. 

இதேபோன்று, நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி பருவத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் நாளை நடைபெறும் பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anna university semester exam postponed for rain


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->