காதலனின் மரணம் நெஞ்சை அடைக்க, காதலி எடுத்த விபரீத முடிவு.. கண்ணீரில் பெற்றோர்கள்.!
Andra Pradesh Chittoor girl Sucide at Avadi due to His Love boy Passed Away
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூரை சார்ந்தவர் முருகன். இவரது மகள் சுஜாதா (வயது 21). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சித்தூரில் இருந்து ஆவடியை அடுத்துள்ள கீழ்க்கொண்டையார் பகுதியில் உள்ள சுஜாதாவின் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர்.
பாட்டி வீட்டில் முருகன் மற்றும் சுஜாதா அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் வருகை தந்து தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், சுஜாதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெளியே சென்றுவிட்ட நிலையில், சுஜாதா திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துள்ளார்.
வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மகள் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடையவே, அக்கம் பக்கத்தினர் முன்னதாகவே சுஜாதாவை மீட்கும் முயற்சி பலனளிக்காததால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், விசாரணையில் சித்தூரில் வசித்து வந்த சுஜாதா, தனது உறவினர் மகன் சிலம்பரசன் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது.
இவர்களின் காதலிற்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சிலம்பரசன் கடந்த 2 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதன்பின்னரே சுஜாதா சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால், காதலன் இறந்த சோகம் தாளாது இருந்து வந்த சுஜாதா, தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துளளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Andra Pradesh Chittoor girl Sucide at Avadi due to His Love boy Passed Away