கள்ளக்காதலன் ஓயாமல் தொல்லை, கணவருடன் சேர்ந்து மீறிய எல்லை.! கட்டம் கட்டி கதை முடிக்க.. கள்ளக்காதலன் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


சென்னை எர்ணாவூர் பகுதியில் ராஜா என்பவர் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். அப்பொழுது அப்பகுதியில் ஹாஜிதா என்ற பெண் தனது குடும்பத்துடன் குடியேறி இருக்கின்றார். ராஜாவுக்கும், அந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்துள்ளது. 

எனவே, தனது மனைவியை அவர் கண்டித்துள்ளார். கணவனுக்கு பயந்து ஹாஜிதாவும் கள்ளக்காதல் பழக்கத்தை கைவிட நினைத்துள்ளார். ஆனால், ராஜாவோ அடங்காமல் அந்த பெண்ணை விரட்டி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக தன்னுடைய கணவரிடம், மனைவி கள்ளக்காதலன் குறித்து புகார் அளிக்க ஆத்திரமடைந்த கணவர் ராஜாவிடம் சண்டையிட்டுயுள்ளார். இதனால் தகராறு ஏற்பட, "முடிந்தால் உன் மனைவியை கண்டித்து கொள். என்னிடம் பிரச்சனை செய்யாதே! உன்னை கொன்று விடுவேன்." என்று ராஜா தெரிவித்துள்ளார். 

பின்னர், இதுகுறித்து ஹாஜிதாவின் கணவர் தனது நண்பரிடம் கூற இருவரும் சேர்ந்து ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஆட்டோவுக்குள் வைத்து ராஜாவை கொலை செய்து இருக்கின்றனர். இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் விரைந்து வந்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் ஹாஜிதா, ஹாஜிதாவின் கணவர், கணவரின் நண்பர் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an women murdered her illegal husband in trivotriyur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->