செங்கல்பட்டில் அதிர்ச்சி.. இருளர் இன மக்களை கொத்தடிமைகளாக பயன்படுத்திய சம்பவம்.! 27 பேரை மீட்ட அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞர் இனத்தைச் சேர்ந்த மக்களை மரம் வெட்டுகின்ற கூலி தொழிலாளிகளாக கொத்தடிமைகளாக பயன்படுத்தி வந்த சம்பவம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

திருப்போரூர் பகுதிக்கு அருகில் உள்ள தையூர் எனும் கிராமத்தில் இருளர் இன மக்களை கொத்தடிமைகளாக வைத்துக் கொண்டு மரம் வெட்டும் கூலி தொழிலில் ஈடுபடுத்துவதாக அரசு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற அதிகாரிகள் அங்கு கொத்தடிமைகளாக இருந்த இருளர் இனத்தைச் சேர்ந்த 27 பேரை மீட்டு திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்க வைத்துள்ளனர். அந்த மக்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு கடன் கொடுப்பது போல கொடுத்து அவர்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் தேவையான உணவை வழங்கிய அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பாலு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An Shocking Incident in Chengalpat


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->