கரூர்: வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து 11 வயது சிறுவன் பரிதாப பலி..!
An 11-year-old boy was killed when the mud wall of his house collapsed
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணமாகி மலர்க்கொடி என்ற மனைவியும் ஆகாஷ் (16) சுனில் (11) என்ற இரு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம் விவசாய கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார்.
இவர்கள் மண்சுவரு கொண்ட குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் அந்த சுவர் பலமிழந்து காணப்பட்டது. ஆனாலும், வேறு வழி இன்றி அவர்கள் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கம் போல சம்பவதன்று அவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு எழுந்தனர்.
அப்போது, ஆறுமுகத்தின் இளையமகன் சுனில் இடிபாடுகளில் சிக்கி கொண்டான். இடிபாடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் , காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன்ர். இந்த சம்பவம்ன் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
An 11-year-old boy was killed when the mud wall of his house collapsed