அகரத்தில் உறைகிணறுகள் கண்டுபிடிப்பு..!! தொல்லியல் துறை அறிவிப்பு..!!
Akaram excavation
அகரம் அகழ்வாய்வில் உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டுவருகிறது. இந்த அகழாய்வில் பல அறிய பொருட்கள் கண்டறிப்பட்டுள்ளது.
இதில், சுடுமண் முத்திரை, காதணிகள், தந்தத்தினாலான பகடை, முதுமக்கள் தாழி, உருவப் பொம்மை, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட பல பொருட்கள் தமிழரின் நாகரிகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என வெளிகாட்டியுள்ளது.
இந்நிலையில், அகரம் பகுதியில் உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தனது சமூகவலைதள பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த உறைகிணறுகளின் படங்களையும் பகிர்ந்துள்ளார்.