அதிமுக பொதுகுழு வழக்கின் தீர்ப்பு எப்போது?! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal



அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் 7 நாட்கள் நடைபெற்ற இரு தரப்பு வாதங்கள் கடந்த ஜூன் 15ஆம் தேதி நிறைவடைந்தது.

வழக்கு விசாரணையின் போது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தன்னை யாரும் தடுக்க முடியாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் வைத்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை என்றும், தீர்மானங்கள் அடிப்படையில் அதிமுக தற்போது செயல்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு விளக்கம் அளித்து வாதம் வைத்தது.

இதனை தொடர்ந்து அனைத்து தரப்பும் தங்களது இறுதி வாதத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்து இருந்தனர்.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Main Cage Judgement Chennai HC order 28 june 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->