திடீர் திருப்பம் : சற்றுமுன் அதிமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்த தேசத்திற்கே மிகப்பெரிய ஆழ்ந்த சோகத்தையும் இழப்பையும் ஏற்படுத்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து, நாளை திமுக அரசை கண்டித்து நடைபெற இருந்த போராட்டம் வருகின்ற 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிடப்பட்ட அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, 

"அதிமுக சார்பில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தமிழக அரசைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் 11.12.2021 - சனிக் கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

வருகின்ற, 17.12.2021 - வெள்ளிக் கிழமை காலை 11 மணியளவில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk protest announce dec 17


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->