தவெக தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெற்ற நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தினர். 

அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று நண்பகல் சென்னை, நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். 

அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால் விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார். இந்நிலையில் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். 

அதில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Vijay against complaint 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->