முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல - நடிகர் தம்பி ராமையா பேச்சு.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல - நடிகர் தம்பி ராமையா பேச்சு.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறப்பு முதல் உள்ள அனைத்து புகைப்படங்களும் கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் நடிகர் தம்பி ராமையா கலந்து கொண்டு புகைப்படங்களை பார்வையிட்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை வரலாறை புத்தகங்களிலும், பிறர் சொல்வதையும் கேட்டுள்ளோம். ஆனால் வாழும் ஒருவருடைய வரலாறை கண்முன்னால் பார்ப்பது என்பது மிகப்பெரிய கொடுப்பனை. ஒரு இரவில் இருந்து விட்டு, மறு இரவில் காணாமல் போவதற்கு பெயர் வெற்றி அல்ல. 

இந்த வெற்றி ஒரே இடத்தில் இருப்பதற்கு மிகப்பெரிய தியாகம், கண்ணீர், துன்பங்கள் என்று அனைத்தையும் அனுபவித்து இருக்க வேண்டும். இந்த கண்காட்சியை பார்க்கும்போது தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல. அவ்வளவு சுலபமாக முதலமைச்சர் ஸ்டாலின் அந்த இடத்தில் அமரவில்லை. 

சிறு படம் தயாரிப்பவர்களுக்கு ஏழு லட்சம் ரூபாய் மானியம் என்பது காதில் தேன் வந்து பாய்வதை போன்றது. ஞான நிலையை எட்டிய வயதில் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார். அந்த ஞானத்தின் விளைவாக தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor thambi ramaiya visit mk stalin book exhibition in coimbatore


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->