தனியார் பள்ளி பேருந்தில் வெடித்த ஆசிட் பாட்டில்: தீவிர சிகிச்சையில் மாணவர்கள்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்றில் ஆசிட் பாட்டில் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 18 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. 

பின்னர் மாணவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

முதற்கட்ட விசாரணையில் கழிப்பறை சுத்தம் செய்வதற்காக எடுத்துச் சென்ற போது வெடித்து சிதறியதாக தெரியவந்துள்ளது. 

மேலும் மூச்சு திணறல் ஏற்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்த வட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

acid bottle explosion private school bus accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->