கோவை : பூங்கா புதரில் வைத்து பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.! நாடக காதலனை வலைவீசி தேடும் போலீசார்.! - Seithipunal
Seithipunal


பூங்காவில் வைத்து 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல், பழனி அருகே உள்ள சத்திரபட்டியை சேர்ந்தவன் கணேஷ் ரகுநாத். 23 வயதாகும் இவன் கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளான்.

அப்போது தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 16 வயது பள்ளி மாணவியுடன் இவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, நாடகக் காதலை கணேஷ் ரகுநாத் அரங்கேற்றியுள்ளான்.

ஒன்றும் அறியாத அந்த பள்ளி சிறுமி, இவன் வீசிய அந்த நாடகக் காதல் வலையில் விழுவே, இதனை அடுத்து இருவரும் செல்போனில் பேசி, நேரில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணேஷ் ரகுநாத் அந்த பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆழியார் பூங்காவுக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட , சிகிச்சைக்காக மாணவியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் உன்னுடைய கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று விசாரித்துள்ளனர். அப்போது மாணவி தனக்கு நடந்த அனைத்து சம்பவத்தையும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கணேஷ் ரகுநாதின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள கணேஷ் ரகுநாத்தை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aanamalai school girl miss used


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->