ஒரே அறையில் காதலியுடன் தங்கி இருந்த வாலிபர் உயிரிழப்பு..காதலியிடம் போலீஸ் விசாரணை!  - Seithipunal
Seithipunal


ஒரே அறையில் காதலியுடன் தங்கி இருந்த கென்யா நாட்டை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்,இது தொடர்பாக  காதலியிடம் போலீஸ் விசாரணைநடத்திவருகின்றனர்.

கென்யா நாட்டை  சேர்ந்த 30 வயதான  கெகோங்கோ டேனியல்  சேலம் கன்னங்குறிச்சி அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். 

கடந்த 2021ல் சேலத்திற்கு வந்த இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு  உகாண்டா நாட்டை  சேர்ந்த  காதலியான நபுகீரா ஹெலனும் ஒரே அறையில் தங்கியிருந்தார். காதலியான நபுகீரா ஹெலன் புதுச்சேரியில் படித்து வருகிறார். புதுச்சேரியில் இருக்கும்  நேரத்தை விட,டேனியலுடன் இருக்கும் நேரம் தான் அதிகமாம் என்கிறார்களாம் பக்கத்தில் உள்ளவர்கள்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி மது குடித்துவிட்டு, மாடியின் சுவரில் அமர்ந்திருந்த டேனியல் திடீரென தவறி கீழே விழுந்தார்.அப்போது  காதலி நபுகீரா ஹெலன் உடனிருந்தார். டேனியல் கீழே விழுந்ததை  சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் டேனியலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் மருதுவமனையில் சிகிச்சை பெற்று வந்த டேனியல் திடீரென உயிரிழந்ந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man who was staying with his girlfriend in the same room dies Police inquiry with the girlfriend


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->