தொடர் துயரம் என்ன செய்யுறதுன்னு தெரியல !!
கல்லூரி படிப்பு முடிந்து 6 மாசம் ஆகிடுச்சு , ஒரு பக்கம் வீட்டு சூழல் வேற மாதிரி இருக்கு , இன்னும் வேலை கிடைக்கல இன்னொரு பக்கம் காதல் தோல்வி வேற...
வாழ்க்கையில அடுத்தகட்டம் தெரியாம என்ன பண்ண போறேன்னு புரியாம ஒரு நாள் மாலை நேரம் விழி பிதுங்கி சேலம் பஸ்ஸ்டாண்ட் ல நின்னேன்.....!!
==============================
சரியா கல்லூரி முடிந்து 6 மாசம் அப்புறம் கல்லூரி நண்பர்களை சந்திக்க சென்றேன்...
3 பேர் தவிர அனைவரும்
தனியார் பைனான்ஸ் , ஐடி கம்பெனி, அப்பாவோட தொழில் 2 பேர் பணம் கட்டி அரசு வேலை கூட வாங்கிட்டான்....
நானும் என்னோட 3 நண்பர்களும் வெறும் ஆளாக நின்னோம்...
சந்திப்பு முடிந்தது ....
திசைக்கு ஒருவராய் கெளம்பியாச்சி..!!
மாலை நேரம் சரியாக 6 மணி வீட்டிற்கு செல்ல சேலம் பஸ்டாண்டில் ஒரு வித சிந்தனையோடு செய்வதறியாது பஸ்ஸுக்கு நின்னுட்டு இருந்தேன்...
பஸ்ஸும் வந்தது....
ஜன்னல் ஓரம் படிக்கு அருகாமை இருக்கையிலேயே அமர்ந்தேன்...
பயணிகளும் ஏற தொடங்கினர்
மாலை நேரம் என்பதால்
BPO கம்பெனியில் வேலை செய்கிற ஐடி கூட்டம் முதலில் ஏறியது...
அடுத்து கல்லூரி மாணவ மாணவிகள் ,
ஊர் சென்று திரும்பிய கூட்டம், அன்றாட கூலி வேலை செல்லும் கூட்டம் என பேருந்து நிரம்பியது....
பேருந்து நகரத்தை கடந்து நெடுஞ்சாலை வந்தது
டிரைவர் பாடலை போட்டார்
" நான் தேடும் செவ்வந்தி பூவிது "
இளையராஜா பாடல் ஒலித்தது
மன குழப்பத்திலேயே குளிர்ந்த காற்றோடு பாடலை ரசித்து கொண்டு பயணிகளை பார்த்தேன்...
இளம் தலைமுறையினர் காதல் ஒருபுறம்
IT கம்பெனியில் வேலை செய்வோரின் தலைவலி ஒரு புறம்
இவற்றை கடந்து இருவரை பார்த்தேன் ...

48 முதல் 50 வயதுடைய ஒரு அம்மா
சோர்வு முகத்தில் வேதனை காட்ட அவரிடம் கேட்டேன்
என்ன வேலை செய்யுறீங்கன்னு
நான் கொத்துவேலைக்கு போறேன் கண்ணு னு சொன்னங்க....
கேள்வி கேட்க தொடங்கினேன் வந்த பதில்
2 பொட்ட புள்ளைங்க
ஊட்டுக்காரர் நூல் மில்லுக்கு வேலைக்கு போறார்
2 புள்ளைங்களுக்கு காலேஜ் போறாளுங்க
அதுங்களை காப்பாத்தி
கரை சேக்கணும் னு வெயில் மழை பாக்கது வேலைக்கு போறோம்
அவ்ளோ வசதிலாம் இல்ல வாடகை வீடு தான் ....
எப்படியோ புள்ளைங்க படிச்சி பேர காப்பதுனா போதும்.....
என்று ஒரு வித வலியோடு சொல்லி முடிச்சாங்க
அடுத்து கண்ட்ரக்டர் அண்ணன் ( கல்லூரி சென்ற 3 வருட பழக்கம் ) போன் ல பேசிட்டு இருந்தார் ஏதோ கடன் தொல்லை போல...
எதிர் பேசுபவரிடம் கெஞ்சி கொண்டு இருந்தார்
பேசி முடிச்சி போன் வைத்த பிறகு கேட்டேன்...
என்ன அண்ணா ஆச்சுன்னு
உனக்கு தெரியாததாபா ? பங்காளி குள்ள சொத்து பிரச்னை
அதை முடிச்சி வைக்க கோர்ட் போய்
பணம் தாறுமாறா போகுது
இன்னும் முடிஞ்சபாடு இல்ல...
கடன் வாங்கி கேஸ் நடத்துறேன்
போதா குறைக்கு பையன் வேர இன்ஜினியர் படிக்குறான்
இப்ப கூட கடன் காரன் தான் போன் பண்ணி இந்த மாச வட்டி பணம் எங்கன்னு கேக்குறேன்..
பைத்தியமே புடிச்சிக்கும் போல இருக்குனு அவரின் குமுறல்
கேட்ட பிறகு எழுந்தது என்னுள் ஒரு கேள்வி ....
ஒருத்தருக்கு சொந்த வீடு கூட இல்லை....
இன்னொருதற்கு இருந்தும் பிரச்சனை தலைக்கு மேல....
நமக்கு இருக்க வீடு இருக்கு, நேரத்துக்கு சாப்பாடு இருக்கு ,சுத்தி நட்பு வட்டாரம் இருக்கு ,
மிடில் கிளாஸ் வகுப்பா இருந்தாலும் ஆண்டவன் புண்ணியத்தில் பெரிய கடன் இல்ல...
நாம ஏன் இப்படி இருக்கணும் ?
ஐடி கம்பெனில வேலை இல்லைனாலும் மாசம் 20,000 சம்பதிக்குற திறமை கொண்ட கைத்தொழில் இருக்கு....
ஐடி கம்பெனியில் வேலை சேருவது என்னவோ லட்சியம் கனவு தான்
வெளியூர் போய் , வீட்டை விட்டு , சொந்தபந்தம், இயற்கை விட்டு
வாகன சத்ததுலையும், இயற்கை அற்ற ஒரு இடத்துல வனவாசம் வாழ
சொந்த ஊருல சொந்த தொழில் பன்னி செம்மயா வாழலாம்
ஒரு வித உணர்வை கொடுத்தது
எனக்கு மட்டுமல்ல ...
எவ்வளவு துயரம், கஷ்டம் இருந்தாலும் ஒரு நாள் மாலை நேரத்தில் பேருந்தில் பயணம் செய்து பாருங்கள் ....
உங்களுக்கே அதன் ஆழமான வலிகள் புரியும்......