கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை.. 5ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட கணித ஆசிரியர்..! - Seithipunal
Seithipunal


5 வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், சேதியூர் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கணித வகுப்பின் போது அந்த மாணவி ஆசிரியர் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அந்த கணித ஆசிரியர் அசோக்குமார் மாணவியிடம் கண்டிப்பது போல பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், பயந்து போன அந்த சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த அந்த தாய் ஆசிரியரை தாக்கியுள்ளார். இதனால், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதனை அடுத்து, அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A math teacher who sexually assaulted a 5th std student


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->