திருநெல்வேலி : மது அருந்தே என கூறியதால் தொழிலாளி செய்த விபரீத செயல்..!
A man Committed Suicide Near Thirunelveli
மது பழக்கத்தை கைவிட கூறியதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், காட்டுப்புலிமேடு பகுதியை சேர்ந்தவர் மோசை என்ற துரை. இவருக்கு அளவுக்கு அதிகமான குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால், இவரை உறவினர்கள் கண்டித்துள்ளனர்.
உறவினர்கள் மதுபழக்கத்தை கைவிட கூறியதால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வழக்குபதிவு செது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A man Committed Suicide Near Thirunelveli