கோயம்புத்தூர் : மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


மனைவி கோபித்து சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், தென்னமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். ராமசாமிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில தனலெட்சுமி அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. இதனால், தனலெட்சுமி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நீண்ட நேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கபடாததால் அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சென்று பார்த்துள்ளார்.

அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man Committed Suicide Near Coimbatore


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->