திண்டிவனம் அருகே கிடந்த ஆண் சடலம்.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திண்டிவனம் அருகே கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலேஜ் ரோடு அருகே 40 வயது மதிப்பு தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. மேலும் அவரது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது.

இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? யாராவது கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man body was found near Tindivanam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->