பதிவுத்துறைக்கு நன்றி பாராட்டி பெயிரா கடிதம்.! - Seithipunal
Seithipunal


அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பதிவுத்துறைக்கு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், நாளை 27.06.2025, வெள்ளிக்கிழமை ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பதிவு அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை பாராட்டி தமிழ்நாடு பதிவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27.06.2025 அன்று ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினம் என்பதால், இந்நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் – மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் அடைகின்றார்கள். 

 இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பாக பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில் ஆவண பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு வில்லைகள் வழங்குவதில் பற்றாக்குறை நிலவுகிறது என்பதனை சுட்டிக்காட்டியும் மேலும் பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் முன்பதிவு வில்லைகளை கணிசமாக உயர்த்தி வழங்கிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு பெயிரா சார்பாக FAIRA கடித எண்: 094/2025, நாள்: 25.05.2025 அன்று கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

 இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை 27.06.2025 ஆனி மாத சுபமுகூர்த்த தினத்தில் ஆவண பதிவு செய்ய விரும்பும் பொதுமக்கள் நலன் கருதி, ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கன்களை கணிசமாக உயர்த்தி ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் முன்பதிவு வில்லைகள் 100-க்கு பதிலாக 150 ஆக உயர்த்தியும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு  வழக்கமாக வழங்கப்படும் முன்பதிவு வில்லைகள்  200-க்கு பதிலாக 300 ஆக உயர்த்தியும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சாதாரண முன்பதிவு வில்லைகள்  100-க்கு பதிலாக 150 ஆக உயர்த்தியும், முன்பதிவு வில்லைகளோடு, வழக்கமாக வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளோடு, கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளென பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட (செய்தி வெளியீடு எண்: 1441, நாள்: 26.06.2025) வழிவகை செய்து நடைமுறைப்படுத்தியமைக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக பெயிரா  தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பதிவுத்துறைக்கு கடிதம்  எழுதியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A letter of appreciation to the registration department


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->