திண்டுக்கல் : 15 வயது சிறுமி பலாத்காரம் - கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி தெற்குகளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சீனிவாசன் (58). இவர் 15 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி சீனிவாசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A laborer who raped a 15 year old girl gets life imprisonment in Dindigul


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->