10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: கடைசி இடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா?
Class 10 Result district stands last
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 9104 மாணவர்கள் 9253 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 357 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதில் 15 ஆயிரத்து 066 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் வேலூர் மாவட்டத்தில் 82.07 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மிக குறைந்த தேர்ச்சியால் வேலூர் மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த தேர்வில் திருப்பத்தூர் மாநில அளவில் 31 வது இடத்தை பிடித்துள்ளது.
ராணிப்பேட்டை 37 வது இடத்தை பிடித்துள்ளது. திருவண்ணாமலை 86.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 36 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Class 10 Result district stands last