பிறந்து சில மணி பெண் குழந்தையை கட்டைபையில் வீசி சென்ற அவலம்.. முசிறி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு..!
A few hours after the birth the baby girl was thrown in the crib
பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை தண்ணீர் தொட்டியில் மேல் வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கட்டபை ஒன்று கிடந்தது. இந்நிலையில், அந்த பையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கவே அவர் அந்த ஊழியர்கள் பையை பார்த்துள்ளனர்.
அப்போது அதில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அங்குள்ள சிஸ்டிவி காட்சிகளை வைத்து குழந்தையை அங்கு விட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A few hours after the birth the baby girl was thrown in the crib