போலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..நெல்லையில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


இளைஞர்களுக்கு இடையே நடந்த தகராறை தட்டிக்கேட்ட போலீஸ் காரரை சரமாரி அரிவாள் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


நேற்று வார விடுமுறை என்பதால் நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவில்  ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் இரவு 9 மணி அளவில் பூங்காவில் நின்ற சில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கு குடும்பத்தினருடன் வந்த போலீஸ்காரரான மணிமுத்தாறு 9-வது பட்டாலியனைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா என்பவர் இளைஞர்களை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதையடுத்து இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  இதற்கிடையே போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லாவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், பூங்காவுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A brutal knife attack on a police officer commotion in Nellai


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->