50 வயது பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த 30 வயது இளைஞர்.. உறவினர்கள் கொடூர தாக்குதல்..! - Seithipunal
Seithipunal


50 வயது பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கூக்கால் கிராமத்தில் தன்ராஜ் என்ற இளைஞர் ஐந்து வருடங்களாக வசித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த பாலாம்மாள் (50) என்பவர் தன்ராஜூன் விடுதியில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அந்த வயதான பெண்மணியின் உறவினர்கள் இருவர் இருவரையும் பலமுறை எச்சரித்தும் ஒன்றாக இருந்து வந்துள்ளனர் . இதனால், வயதான பெண்மணியின் உறவினர்களுக்கும் இளைஞருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று அங்கு நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள சென்ற அந்த தன்ராஜை மதுபோதையில் இருந்த பாலாம்மாளின் சகோதரர் பூவேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் ஆபாசமாக திட்டி கை கால்களை கட்டி போட்டு கல்லால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை கண்ட பாலாம்பாள் ஊர் மக்கள் உதவியுடன் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தரன்ராஜை தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் எந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 30 old man who lived with a 50 year old woman


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->