தாய் திட்டியதால் 8ம் வகுப்பு மாணவன் செய்த விபரீத செயல்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..! - Seithipunal
Seithipunal


தாய் திட்டியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை தேவஸ்தானம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் தனது இரு மகன்களுடன் வசித்து வருகிறார். அவரது மூத்த மகன் கனிஷ்கர் (12) நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். கனிஷ்கர் செல்போன் சார்ஜர் வயரை துண்டித்து  செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.

இதனால், கனிஷ்கர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலக்ட்ரிக்கல் வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்த ராதா அதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8th grade student Committed Suicide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->