சேலம்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. 74 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு...!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 74 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டுப்பாளையம் லத்துவாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(74). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமி மிட்டாய் வாங்குவதற்காக செல்வராஜ் கடைக்குச் சென்றுள்ளார். அப்பொழுது மிட்டாய் தருவதாக கூறி செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு செல்வராஜை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 11,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து செல்வராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

74 year old man sentenced to life imprisonment for sexually harassing 8 year old girl in salem


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->